Saturday, 6 December 2014

அவதார மகிமை என்ன ?

அவதார மகிமை என்ன ?



 மைந்தர்கள் பன்னிரு வகை.
1.தன் மனைவியிடம் தனக்குப் பிறந்தவன் ஔரசன்   
2.   தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம்  அனுப்பி      கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன்.
 
3. இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டவன் தத்தன்.
4. தன்னால் மனம் கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன்
5. மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன்.
6.உரியமுறையில் காணிக்கை கொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன்.
இந்த ஆறு மைந்தர்களும் அனைத்து வகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமை கொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை.
இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர்.
7.  மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன்
8.தன் மனைவி தன்னைப் பிரிந்து சென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன்.
 
9.நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன்
10. மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன்.
11.கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். 
12. ஒழுக்க மீறலினால் தனக்கு பிற பெண்களிடம் பிறந்த பாரசரவன். 
அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்க மறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார் கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர் பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு
{ எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதிவரும் மகாபாரத கதை வெண்முரசுவின் இரண்டாம் பாகமான மழைப்பாடல் பகுதியில் 73 அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. }
அரசன் பாண்டுவுக்கு பெண்களிடம் உடல் உறவு கொண்டு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை. எனவே குழந்தை வேண்டும் என்ற காரணத்தால் தனது மனைவி பிறர் மூலம் குழந்தை பெற்று கொள்ள அனுமதிக்கிறார்.
துர்வாச முனிவர் குந்திக்கு அவளது திருமணத்திற்க்கு முன்னரே ஒரு மந்திரத்தை உபதேசித்துள்ளார். இந்த மந்திரத்தை உச்சரித்து யாருடைய குழந்தை தனக்கு பிறக்க வேண்டுமென நினைத்து , யாருடன் உடல் உறவு கொண்டாலும் , அவருடைய விந்து உறவு கொள்பவனின் வழியாக உன்னிடம் சேர்ந்து உனக்கு குழந்தையாக பிறப்பார்கள் என வரமளிக்கிறார். 5 முறை மட்டுமே உபயோகிக்க அனுமதியளிக்கிறார்.
திருமணத்திற்க்கு முன் இந்த மந்திரத்தை சோதித்து பார்க்கும் பொருட்டு, மந்திரத்தை உச்சரித்து சல்லிய நாட்டு மன்னன் சல்லியனிடம் உறவு கொண்டு பிறந்த குழந்தை கர்ணன்.
திருமணத்திற்க்கு பின் அரசன் பாண்டுவிடம் இந்த மந்திர தன்மையை சொல்லி அவனது அனுமதியுடன் மூன்று குழந்தைகளை பெற்று கொள்கிறாள்.
தர்ம தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை தர்மன்
வாயு தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை பீமன்
இந்திர தேவனை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தை அர்ஜூனன்
பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு இந்த மந்திரத்தை குந்தி சொல்லி கொடுத்து அவளையும் இதே போல குழந்தை பெற்று கொள்ள சொல்கிறார்கள்.
மாத்ரி அஸ்வின் தேவர்களை நினைத்து பெற்றுக்கொண்ட குழந்தகள் நகுலன் மற்றும் சகாதேவன் ( இரட்டை குழந்தைகள் )
இதற்கு பிறகு பாண்டுவும் மாத்ரியும் இயற்க்கையான முறையில் உடல் உறவு கொள்ளும் போது பாண்டு இறந்து விடுகிறான்.
பாண்டு என்ற அரசனும் குந்தி என்ற அரசியும் இயற்க்கையான முறையில் உடல் உறவு கொண்டு பெறாத குழந்தைகளை இளவரசர்களாக அங்கீகரித்து அதில் மூத்தவன் தருமனுக்கு அரசுரிமை கோரியுள்ளனர்.
ஆனால் பாண்டுவின் அண்ணன் அரசர் திருதஷ்டிரர் அரசி காந்தாரியும் இயற்கையான முறையில் உடல் உறவு கொண்டு பெற்ற குழந்தை துரியோதனனுக்கு இளவரசு பட்டமும் அரசுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.
முறையாக பிறக்காத குழந்தை தருமனுக்கு அரசுரிமை பெற்று தர விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பல வித நியாயங்களை (அதர்மங்களை ) கூறி மாபெரும் யுத்தத்தை நடத்த உதவியுள்ளார்.
தருமனுக்கு ஏன் முடி சூட்ட வேண்டும் ஏன் துரியோதனனுக்கு மூடி சூட்ட கூடாது என்பதற்க்கு பலரும் பல விதமான காரண காரியங்களை கூறி விவாதிக்கின்றனர்.
இந்த கதையை மாபெரும் காப்பியம் என்று கூறி பல நூற்றாண்டுகளாக படித்து போற்றி வருகின்றனர்.
இன்றைய சமூகத்தில் இவ்வாறு முறையாக பிறக்காத குழந்தைகளுக்கு ஒரு பொதுப்பெயர் மட்டுமே உள்ளது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக கட்டுப்பாட்டில், கணவன் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
தானே இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் கணவனை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள சமூகத்தாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கணவனும் மனைவியும் பிரியாமல் தங்களுக்கான குழந்தையை பெற்றுக்கொள்ள நவீன விஞ்ஞான முறை சில வழிகளை கண்டுப்பிடித்துள்ளது. 
அவர்களது விந்து முட்டைகளை இனைத்து மனைவியின் கருவறையிலிருந்தோ அல்லது மற்ற பெண்ணின் கருவறையிலிருந்தோ குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
விந்துவையோ அல்லது கரு முட்டையையோ விலைக்கு வாங்கி சோதனை சாலையில் கருவுற செய்து மனைவியின் கருவறையிலிருந்தோ அல்லது மற்ற பெண்ணின் கருவறையிலிருந்தோ குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதர்மம் எப்போதெல்லாம் தலை விரித்து ஆடுகிறதோ அப்பொதெல்லாம் நான் அவதரிப்பேன் என்பது விஷ்ணுவின் அவதாரத்துக்கு சொல்லப்படுகிறது.
அண்ணன் தம்பிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடக்கும் அரசுரிமை பகைமை அதர்மமா ? இதற்கு . முன் சகோதரர்களுக்கிடையே இவ்வாறு அரசுரிமை போர் நடந்தில்லையா ? இந்த அரசுரிமை போருக்கு ஒரு சார்புக்கு ஆதரவளிக்க விஷ்ணு அவதரிக்க வேண்டுமா ? அப்படியே அது மாபெரும் அதர்ம செயல் என்று கருதி அவரது அவதாரத்துக்கு நியாயம் கற்ப்பித்தாலும், அவரது அவதாரத்துக்கு பிறகு எத்தனையோ அரசுரிமை போர்கள் நடந்துள்ளது. அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏன் அவர் அவதாரம் எடுக்கவில்லை ? அவதாரம் எடுத்து அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய பிறகும் அது மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் அந்த அவதாரத்துக்கு என்ன பொருள் ? 
கடவுளே நேரில் வந்து தீர்த்து வைத்த பிரச்சனை மீண்டும் மீண்டும் நடக்கிறது என்றால் மனித குலம் கடவுளின் நியாய தர்மங்களை ஏற்க்கவில்லையென்று தானே பொருள்படுகிறது. இப்படிப்படிட நிலையில் இந்த அவதார கதைகளை நம்ப தான் வேண்டுமா ?
கலியுகத்தில் மீண்டும் அவதரிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது நடந்து வரும் கலியுகத்தில் எத்தனையோ அதர்மங்கள் நடைப்பெருகின்றன. இன்னமும் மிகப் பெரிய அதர்ம செயல் நடைப்பெறும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். கலியுக அவதாரத்தில் உலகமே அழிந்தி விடும் என்று கூறும் போது, இப்போதே அவதரித்து அதர்மங்களை அழித்து மனித குலத்தை அழித்து மீண்டும் எதை உருவாக்க வேண்டுமென நினைக்கிறரோ அதை நிறைவேற்ற வேண்டியது தானே ?  
இதிகாசங்களிலிருந்து காப்பியங்களிலிருந்தும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இவைகளை அதிகமாக ஆராய கூடாது என்பதும் சரியான வாதம் அல்ல. 


Sunday, 31 August 2014

ஜிகர்தன்டாவும் சௌராஷ்டிரர்களும்::



ஜிகர்தன்டாவும் சௌராஷ்டிரர்களும்::

ஜிகர்தன்டா திரைப்படம் வந்த சமயத்தில் அதில் வரும் பெண் கதாபாத்திரம் சௌராஷ்ட்டிரா மொழி பேசுபவராக அமைக்கப்பட்டிருப்பதாகவும், அப்பெண் புடவை கடையில் புடவை திருடுவது போல காட்சியமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் சிலர் பதிவு எழுதியிருந்தனர். அதை படித்த பலரும் அதை ஆதரித்து அதில் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த சமயத்தில் அந்த படத்தை நான் பார்க்காத்தால், அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இன்று அந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது

மேலும், , ஜூட்டி சன்ஸ் ஆட் பேஜில் என்ற .சௌராஷ்ட்ரா பத்திரிக்கை 1-15 செப்டம்பர் இதழில் , இதற்கு கண்டன கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றதாகவும் செய்தி வந்துள்ளது.

1. புடவை திருடுவது போல வந்த காட்சி, சௌராஷ்ட்ரா சமூகத்தை கீழ்தரமாக சித்தரிப்பது போல இருக்கிறது என்பது வாதம்.
சமூகத்தில் யாரும் திருட்டு குற்றங்களை செய்யவில்லை என்று நிச்சியமாக கூற முடியுமா ? பெரும்பான்மையான சமூக மக்கள் வாழும் மதுரையிலும் மற்ற மாவட்டங்களிலும் திருட்டு குற்றம் தவிர வேறு எந்த குற்றச்செயல்களிலும் சமூக மக்கள் ஈடுபடவில்லையென்று கூற முடியுமா ? இதை யாராவது காவல் நிலையங்களில் சென்று விசாரித்து சரி பார்த்தார்களா ?

2. அந்த பெண், கதாநாயகி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு அம்மாவாகவும் ஒரு பெண்மனி நடிக்கிறார். இருவரும் அந்த பகுதியில் மோசமான சமூக விரோதி கொலைக்காரனுக்கு உணவு சமைத்து கொடுப்பதாக காட்டப்பட்டுள்ளது. அந்த காட்சிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. தொழில் ரீதியாக ஒரு சமூக விரோதிக்கு பணிவடை செய்யும் போது ஏற்படாத அவமானம் , புடவை திருடுவது போல காண்பிக்கப்படும் காட்சியால் அவமானம் ஏற்ப்படுகிறாதா ?

3. அந்த பெண் தமிழ் வாலிபனை காதிலிப்பதாகவும் காண்பிக்கப்படுகிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பது, மாற்று சமூகத்தை சார்ந்த வாலிபர்களை நமது சமூக பெண்கள் காதலிப்பது தான் ? அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நமது சமூக பெண் காதலிப்பது போல் காட்டியிருப்பதை ஏன் கண்டிக்கவில்லை. திருட்டை விட இது மிகவும் மோசமானது. இதை பார்த்து நம் சமூக பெண்கள் எல்லாம் காதலிக்க ஆரம்பித்து விடுவார்களே அல்லது நமது சமூக பெண்கள் எல்லாம் காதலிப்பவர்கள் என்று மற்ற சமூகத்தினர் நினைத்து விடுவார்களே என்ற சந்தேகம் ஏன் வரவில்லை. நமது சமூக பெண்கள் எல்லாம் இதை பார்த்து விட்ட தைரியமாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து நமது பெண்களை வீட்டில் ஏன் பூட்டி வைக்கவில்லை.

திருடுவது போல காண்பிப்பது அவமானம் என்றால், சமூக விரோதிக்கு துனையாக இருப்பதும், காதலிப்பது கூட தான் அவமானம்.

இந்த படம் பார்த்த 99% மேற்ப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சமூகம் இருக்கிறது என்றே தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்த சமூகம் திருட்டு கும்பல் என்று எப்படி நினைப்பார்கள்.
நமது எதிர்ப்பு என்பதை பதிவு செய்ததன் மூலம் இப்படிப்பட்ட சமூகம் ஒன்று இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் இந்த சமூகம் இப்படி தான் என்று நினைக்க வழி செய்திருக்கிறார்கள். இதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், யாருக்கும் இது தெரிந்திருக்க போவதில்லை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற கதையாக இருக்கிறது இந்த போராட்டம்.

சமூக மக்களே ஒரு விசயத்தை பேசுவதற்க்கு முன்பும் செயல் படுத்துவதற்க்கு முன்பும் யோசியுங்கள். சிந்தியுங்கள். உங்களது முன் யோசனையில்லாத காரியத்தால் சமூகத்திற்க்கு இழுக்கு தேடி தராதீர்கள்.

Wednesday, 28 May 2014

அமைச்சர்கள்



முக்கிய மந்திரிகள் – (Cabinet Minister)


முக்கிய துறைகளை கவனிக்க நியமிக்கப்படுபவர்கள் கேபினட் மந்திரி என அழைக்கப்படுவார். பொதுவாது, உள்துறை அமைச்சகம் (Home Ministery) , வெளியுறவு துறை அமைச்சகம் (External Affairs Ministry, எண்ணை வள துறை ( Petroleum Ministry) கல்வி (Education Ministry ) நல்வாழ்வு (Welfare Ministry ) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் (Science and Technology ) சுகாதாரம் (Welfare), பாதுகாப்பு அமைச்சகம் (Defence Ministry) சட்டம் மற்றும் நீதிதுறை(Law & Justice) மற்றும் பல.

இவைகள் சிறிய துறைகளாக இருந்தால் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள்.

பல சமயங்களில் முக்கிய முடிவுகளை பிரதமர் எடுக்கும் போது மந்திரிசபையை கலந்தாலோசிப்பார். மந்திரி சபையில் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.

இணை அமைச்சர் - Minister of State

முக்கிய துறைகளில் கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும், அந்த துறை பெரிதாக இருந்தால் ,அல்லது இரண்டு துறைக்கு சேர்த்து ஒரு கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டால் கேபினட் அமைச்சருக்கு உதவி செய்ய ஒரு துணை அமைச்சர் நியமிக்கப்படுவார். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்து எடுக்கும் எல்லா முடிவுகளையும் செய்த வேலைகளையும் கேபினட் அமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும்

இணை அமைச்சர்தனிதுறை (Minister of State-Independent)

கேபினட் அமைச்சர் நியமிக்கப்படாத சிறிய துறைகளுக்கு நியமிக்கப்படும் அமைச்சருகளுக்கு Minister of State – Independent Charge என்று பெயர். இவர் அவரது துறையை தனியாக நிர்வாகிப்பார். எந்த அமைச்சருக்கும் கீழ் இவர் வேலை செய்ய மாட்டார். பிரதமரின் நேரடி பார்வையில் இருப்பார்.


மொத்தமுள்ள மக்களவை உறுப்பினர்களில் , பாதி அல்லது பாதிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள கட்சி ஆட்சி அமைக்கலாம். எந்த கட்சிக்கும் போதிய பலம் இல்லையெனில் மற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்

ஆட்சி அமைக்கும் கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் மற்ற அமைச்சர்களை நியமிப்பார். எப்போது வேண்டுமானலும், புதிய அமைச்சர்களை நியமிக்கவும், மற்ற அமைச்சர்களின் துறைகளை மாற்றவும் அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றவர்.

அமைச்சராக நியமிக்கப்படுவதற்க்கு எந்த கல்வி தகுதியோ , துறை சார்ந்த அனுபவமோ வயது வரம்போ தேவையில்லை

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் , பொது தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கவேண்டும் அல்லது குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேற் கூறிய தகுதி இல்லாத ஒருவரும் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ நியமிக்கப்படலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் , அடுத்த ஆறு மாதங்களில் மக்களவை உறுப்பினராகவோ அல்லது ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

Friday, 23 May 2014

சௌராஷ்ட்ரா மக்களின் சமூக பொறுப்பு



பெண்ணை கேலி செய்தால் வாய் உடைக்கப்படும்

மதுரையில் சௌராஷ்ட்ர பெண்களை கேலி செய்த
>>
அன்னஜாத் << பையன் வாயை உடைத்த சௌராஷ்ட்ர இளைஞர் தெருமுழுவதும் திடிர் பரபரப்பு !
தப்பி ஓடிய அன்னஜாத் பையன் !!!

இந்த செய்தியின் பின்னனி என்ன ?

நமது சமூக பெண்ணை வேறு சமூக பையன் கேலி செய்தது தவறு. அதற்கு நமது சமூக இளைஞர் தண்டனை கொடுத்தார் என்பது பெருமையான செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது

நமது சமூக பெண்ணை வேறு சமூக பையன் கேலி செய்தால் இப்படி தான் தண்டிக்க வேண்டும் என்ற செய்தியை பரப்புவது நோக்கமா ?

கேலி செய்த பையன் பெண்ணின் சமூகத்தை பார்த்து தான் கேலி செய்கிறானா அல்லது கண்ணில் படும் பெண்ணை எல்லாம் கேலி செய்கிறானா ?

இந்த பெண்ணை நமது சமூக பையன்  கேலி செய்தால் இதே தண்டனை தான் கொடுப்பார்களா அல்லது இப்படி செய்யாதே என்று கூறி மன்னிப்பார்களா ?

ஒருவேளை நமது சமூக பையன் வேறு சமூக பெண்ணை கேலி செய்து இது போன்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டால் அப்போது பொறுத்து போவாமா அல்லது ஏன் அடித்தாய் என்று சண்டைக்கு போவோமா ?

இப்படி ஒரு நிகழ்ச்சி நமது சமூக பெண்ணுக்கு ஏற்படாமல், இரு வேறு சமூக ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்ப்பட்டிருந்தால், இரண்டு ஜாதியையும் குறிப்பிட்டு செய்தி வெளியிடுவாரா அல்லது இது ஒரு சாதாரன நிகழ்ச்சி என்று செய்தி வெளியிடாமல் இருந்திருப்பாரா ?

செய்தி வெளியிட்டதன் நோக்கம் பெண்ணை ஆண் கேலி செய்ய கூடாது என்பதா அல்லது நமது சமூக பெண்ணை வேறு சமூக ஆண் கேலி செய்ய கூடாது என்பதா ?

செய்தியை வெளியிடும் போது உணர்ச்சிகளை தட்டி எழுப்பி அதன் மூலம் பிரச்சனையை பெரிதுபடுத்துவது , இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்ப்படுத்துவது சரியா.

அடி வாங்கிய இளைஞர் அவரது நண்பர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து தாக்கியவரை அவர்கள் தாக்க வாய்பிருக்கிறது.

இந்த இடத்தில் அந்த இளைஞர் அந்த பெண் இருவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் வேறு சமூகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே வேறு மதத்தை சார்ந்தவராக இருந்தால் மத கலவரம் ஏற்ப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணும் , செய்தி வெளியிட்டவரும் பதுங்கி கொள்வார்கள். மக்கள் அடித்து கொண்டு சாவர்கள்.

இப்படி பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதால் தான் நாட்டில் ஜாதி கலவரங்களும் மத கலவரங்களும் நடைப்பெறுகிறது.
நான் இப்படி எழுதுவதால், நமது சமூக பெண்கள் துன்பத்திற்க்கு ஆளாகும் போது எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா, நமது சமுக பெண்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி எழுப்புவார்கள். நமது சமூக பெண்கள் பாதிக்கப்படும் போது,  சும்மா இருக்கவேண்டும் என்று கூறவில்லை. சம்பவம் சரியா நடந்ததா அல்லது தவறா என்பது பிரச்சனையல்ல. அதை சமூகம் குறிப்பிட்டு செய்தியாக்கியது தான் தவறு.

எல்லோரும் ஊடகங்கள் உட்பட இப்படி தானே செய்திகள் வெளியிடுகின்றன அவர்களை கண்டிக்காமல் இந்த செய்தியை மட்டும் கண்டிப்பது ஏன் என்று கேள்வியை எழுப்பகூடும். நமது சமூகத்திற்க்கு நமது சமூக மக்களே எதிராக கருத்து தெரிவிப்பதாகவும் வாதட கூடும். யாராக இருந்தாலும் ஜாதி, மதம் பற்றி குறிப்பிட்டு செய்தி வெளியிட கூடாது என்பது தான் எனது நிலை.

முகநூலில் பதிவு இட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவசரப்பட்டு இப்படி செய்தி வெளியிட்டு விட்டார் என நினைக்கிறேன். செய்தி வெளியிட வேண்டுமென்றால் பொதுப்படையாக பெண்ணை கேலி செய்த இளைஞரை பொது மக்கள் தண்டித்தனர் என்று செய்தி வெளியிடவேண்டும்.