Sunday, 31 August 2014

ஜிகர்தன்டாவும் சௌராஷ்டிரர்களும்::



ஜிகர்தன்டாவும் சௌராஷ்டிரர்களும்::

ஜிகர்தன்டா திரைப்படம் வந்த சமயத்தில் அதில் வரும் பெண் கதாபாத்திரம் சௌராஷ்ட்டிரா மொழி பேசுபவராக அமைக்கப்பட்டிருப்பதாகவும், அப்பெண் புடவை கடையில் புடவை திருடுவது போல காட்சியமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் சிலர் பதிவு எழுதியிருந்தனர். அதை படித்த பலரும் அதை ஆதரித்து அதில் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த சமயத்தில் அந்த படத்தை நான் பார்க்காத்தால், அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இன்று அந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது

மேலும், , ஜூட்டி சன்ஸ் ஆட் பேஜில் என்ற .சௌராஷ்ட்ரா பத்திரிக்கை 1-15 செப்டம்பர் இதழில் , இதற்கு கண்டன கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றதாகவும் செய்தி வந்துள்ளது.

1. புடவை திருடுவது போல வந்த காட்சி, சௌராஷ்ட்ரா சமூகத்தை கீழ்தரமாக சித்தரிப்பது போல இருக்கிறது என்பது வாதம்.
சமூகத்தில் யாரும் திருட்டு குற்றங்களை செய்யவில்லை என்று நிச்சியமாக கூற முடியுமா ? பெரும்பான்மையான சமூக மக்கள் வாழும் மதுரையிலும் மற்ற மாவட்டங்களிலும் திருட்டு குற்றம் தவிர வேறு எந்த குற்றச்செயல்களிலும் சமூக மக்கள் ஈடுபடவில்லையென்று கூற முடியுமா ? இதை யாராவது காவல் நிலையங்களில் சென்று விசாரித்து சரி பார்த்தார்களா ?

2. அந்த பெண், கதாநாயகி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு அம்மாவாகவும் ஒரு பெண்மனி நடிக்கிறார். இருவரும் அந்த பகுதியில் மோசமான சமூக விரோதி கொலைக்காரனுக்கு உணவு சமைத்து கொடுப்பதாக காட்டப்பட்டுள்ளது. அந்த காட்சிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. தொழில் ரீதியாக ஒரு சமூக விரோதிக்கு பணிவடை செய்யும் போது ஏற்படாத அவமானம் , புடவை திருடுவது போல காண்பிக்கப்படும் காட்சியால் அவமானம் ஏற்ப்படுகிறாதா ?

3. அந்த பெண் தமிழ் வாலிபனை காதிலிப்பதாகவும் காண்பிக்கப்படுகிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பது, மாற்று சமூகத்தை சார்ந்த வாலிபர்களை நமது சமூக பெண்கள் காதலிப்பது தான் ? அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நமது சமூக பெண் காதலிப்பது போல் காட்டியிருப்பதை ஏன் கண்டிக்கவில்லை. திருட்டை விட இது மிகவும் மோசமானது. இதை பார்த்து நம் சமூக பெண்கள் எல்லாம் காதலிக்க ஆரம்பித்து விடுவார்களே அல்லது நமது சமூக பெண்கள் எல்லாம் காதலிப்பவர்கள் என்று மற்ற சமூகத்தினர் நினைத்து விடுவார்களே என்ற சந்தேகம் ஏன் வரவில்லை. நமது சமூக பெண்கள் எல்லாம் இதை பார்த்து விட்ட தைரியமாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து நமது பெண்களை வீட்டில் ஏன் பூட்டி வைக்கவில்லை.

திருடுவது போல காண்பிப்பது அவமானம் என்றால், சமூக விரோதிக்கு துனையாக இருப்பதும், காதலிப்பது கூட தான் அவமானம்.

இந்த படம் பார்த்த 99% மேற்ப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு சமூகம் இருக்கிறது என்றே தெரியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்த சமூகம் திருட்டு கும்பல் என்று எப்படி நினைப்பார்கள்.
நமது எதிர்ப்பு என்பதை பதிவு செய்ததன் மூலம் இப்படிப்பட்ட சமூகம் ஒன்று இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் இந்த சமூகம் இப்படி தான் என்று நினைக்க வழி செய்திருக்கிறார்கள். இதை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், யாருக்கும் இது தெரிந்திருக்க போவதில்லை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற கதையாக இருக்கிறது இந்த போராட்டம்.

சமூக மக்களே ஒரு விசயத்தை பேசுவதற்க்கு முன்பும் செயல் படுத்துவதற்க்கு முன்பும் யோசியுங்கள். சிந்தியுங்கள். உங்களது முன் யோசனையில்லாத காரியத்தால் சமூகத்திற்க்கு இழுக்கு தேடி தராதீர்கள்.

1 comment:

  1. எப்பவுமே உங்களின் கருத்துக்கள் வித்தியாசமாகவும், அதே சமயம் ஒப்புக் கொள்ளும் படியாவும் எப்படி அமைகிறது???

    ReplyDelete