Monday, 16 April 2012

அவலங்களை அறிந்து கொள்ளவும்


டெல்லி சௌராஷ்ட்ரா அசோசியேசனில் நடந்து வரும் நிகழ்ச்சிகளை நிங்கள் அறிந்தாலும் முந்தைய நிகழ்ச்சிகளை சுருக்கமாக விவரிக்கிறேன்.
ஆரம்ப காலங்களிலிருந்தே கட்டிடம் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்த்து. உண்டியல் வைத்து சிறுக சிறுக பணம் சேர்க்கப்பட்டது. சுமார் 2 லட்சம் அளவுக்கு சேர்ந்த பின்பு அரசிடம் நிலம் வாங்கி கட்டிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
அது சமயம் பல உறுப்பினர்கள் இது மிக பெரிய திட்டம் நிறைய பணம் தேவைப்படும் என்றும் அதற்கு பதில் FLAT ஒன்று வாங்கலாம் என ஆலோசணை கூறப்பட்டது. இருப்பினும் நிர்வாக குழு நிலம் வாங்கி கட்டிடம் கட்டுவதே சிறப்பானது என வற்புறுத்தியதால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி டெல்லி மேம்பட்டு கழகத்தில்(DELHI DEVELOPMENT AUTHORITY) நிலம் கேட்டு விண்ணப்பிப்பது என முடிவு செய்யப்பட்ட்து. உறுப்பினர்கள் அதற்கு நண்கொடை தரவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
டெல்லி மேம்பட்டு கழகம்(DELHI DEVELOPMENT AUTHORITY) கொள்கை அளவில் நிலம் ஓதுக்க ஒப்புக்கொண்டு கடிதம் அனுப்பியது. அதில் மேற்கொண்டு நிலம் ஒதுக்கும் காரியங்களை செய்வதற்கு முன்பு அசோசியேசன் ரூ.20 லட்சம் வைப்பு நிதி தங்களிடம் வைத்திருக்க  வேண்டும் என குறிப்பிட்டிருந்த்து.
உடனடியாக அசோசியேசன் நிர்வாகம் உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை வசுலிக்க ஆரம்பித்த்து. மேலும் உறுப்பினர்  அல்லாதவர்களிடமிருந்தும் நன்கொடை வசுலித்தது. இதற்கிடையில் அசோசியேசன் உன்மையில் உள்ளதா மற்றும் இயங்குகிறதா என DELHI DEVELOPMENT AUTHORITY நிர்வாக உறுப்பினர்களின் வீடுகளுக்கு POLICE VERIFICATION அனுப்பியது. ரூ.20 லட்சத்திற்கு மேல் வசூலித்த பின்பு DELHI DEVELOPMENT AUTHORITYக்கு தகவல் தெரிவித்து நிலம் ஒதுக்க விண்ணப்பிக்கபட்டது.
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், அமைச்சகத்திலும் DDAவிலும் செய்ய வேண்டிய காரியங்களை மதுரை முன்னாள் MP திரு.P.MOHAN அவர்கள் முன்னின்று செய்து கொடுத்தார். அவர் செய்த உதவிகள் பற்றி குறிப்பிட தனி கட்டுரை எழுத வேண்டும்.(வருத்தமான விஷயம் அவர் மறைவுக்கு நேரில் சென்று மரியாதை செய்யவில்லைகாரணம் அசோசியேசன் குறிப்பிட்ட கட்சி சார்ந்த்து என அடையாளப்படுத்தபடும் என்றும் பின்பு மற்ற கட்சி அரசியல்வாதிகள் நமக்கு உதவி செய்யமாட்டார்கள் என முடிவு செய்து நிர்வாகம் இறுதி மரியாதை செலுத்த செல்லவில்லை. நன்றி மறந்தவர்கள்)
இதற்கு பின்பு பலமுறை DDAவை அணுகியபோதும் மேற்கொண்டு எந்த காரியமும் இன்று வரை நடைபெறவில்லை.
இந்த நிகழ்சிகள் 2004-2006 ஆண்டுகளில் நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு, 2004-2006 ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. அதற்கு பின்பு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை.
சில கூட்டங்கள் நடைபெற்றது.அதில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரப்பட்ட்து. ADUITED BALANCE SHEET சமர்பிக்கும்படி கேட்கபட்டது.
அதற்கு அவர்கள் அளித்த பதில்
1) DDAவில் நமது நிலம் ஒதுக்கிடு சம்மந்தமாக வேலை நடந்துகொண்டிருப்பதால் , இந்த சமயம் நிர்வாக குழு மாறினால் வேலை பாதிக்கப்படும் அதனால் தேர்தல் நடத்தவில்லை என கூறப்பட்டது. நிலம் ஒதுக்கிடு முடிந்தவுடன் மொத்தமாக கணக்குகள் சமர்பக்கபடும் என்று கூறப்பட்டது. நானும் திரு.பாண்டுரங்கன் என்ற உறுப்பினறும் கடுமையாக ஆட்சேபித்தோம். மற்ற நிர்வாக உறுப்பினர்கள் வேண்டுகோளின்படி ஏற்றுக்கொண்டோம்.
2006, 2008 மற்றும் 2010 ஆண்டுகளில் இதே காரணங்களை கூறி தேர்தல் நடத்தவில்லை. மேலும், கட்டிடம் கட்டும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். எனவே அதை முடிக்கும் வரை நாங்கள் தான் பொறுப்பில் இருப்போம் என்றும் கூற ஆரம்பித்தனர்.
இது விதண்டாவாதம் என்றும் இது சாத்தியபடாது என்று பல உதாரணங்கழுடன் கூறியும் அவர்கள் ஏற்க மறுத்தனர்.
2010 ஆண்கு முதல் திவிரமாக செயல்பட்டோம்.மற்ற நிர்வாக குழு உறுப்பினர்கழும் திவிரத்தையும் நியாயத்தை உணர்ந்தும் அவர்களும் தேர்தல் நடத்த வேண்டும் கணக்குகளை சமர்பிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் இடையில் தலைவர் திரு.R.S.S.நாதன் அவர்கள் பணி ஓய்வு பெற்று மதுரை/பெங்கலூர் சென்று தங்கிவிட்டார். இதை காரணம் கூறி செயலாலர் திரு.கிஷோர்குமார் மற்றும் பொருளாளர் திரு.கணேஷ் அவர்கள் தேர்தலும் நடத்தவில்லை கணக்குகளையும் சமர்பிக்கவில்லை.
இது சமயம் நான் திவிரமான வாக்கு வாதத்திலும் குற்றசாட்டுகள் சுமத்தியதாலும் சற்றே அசைந்து கொடுத்து கூட்டங்கள் நடத்தினர். இந்த ஆண்டு ஆரம்பத்தில் முன்னாள் M.P. திரு.ராம்பாபு முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. மீண்டும் மீண்டும் பழைய காரணங்களையே கூறிக்கொண்டிருந்தனர்.
 திடிரென்று பயங்கர குற்றசாட்டை கூறினர். எல்லோரும் அதிர்சி அடைந்தனர்.
1) நாங்கள் தான் கட்டிடம் கட்டுவதற்கு நிதி சேர்த்தோம். மற்றவர்கள் நிர்வாகத்துக்கு வந்தால் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி தீர்த்து விடுவார்கள் அதற்காகதான் இவர்கள் நிர்வாகத்தை கைப்பற்ற தேர்தல் கோரிக்கை வைக்கின்றனர் என திரு.கிஷோர் குமாரும் திரு.கனேஷ் பாபுவும் குற்றம் சாட்டினர். மேலும்
2) நாங்கள் நிணைத்தால் எல்லா பணத்தையும் சுருட்டி கொண்டு போக முடியும் என்றும் கூறினர். பலத்த வாக்கு வாதம் ஏற்ப்பட்ட்து.
இந்த குற்றசாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல உறுப்பினர்கள் கூட்டாக கண்டணம் தெரிவித்தனர்.
விஷயம் சூடுபிடித்தவுடன், தலைமறைவு தலைவர் வரவழைக்கப்பட்டார்.
19.02.2012 அன்று தலைவர் முன்னிலையில் குற்றசாட்டுகளும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. தேர்தல் நடத்தாமைக்கும் கணக்குகள் சமர்பிக்காமைக்கும் சரியான காரணம் கூறவில்லை.மீண்டும் மீண்டும் வலியுருத்திய போதும் உறுதியான பதில் கூற தலைவர் முன் வரவில்லை. இதற்கிடையே திரு.கனேஷ் பாபு இவ்வாறு வற்புருத்தினால் அசோசியேஷனை மூடி விடுவோம் என்று கூறியதால் ரகளை ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்ப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பின்பு இறுதியாக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) 31.03.2012 வரை உறுப்பினர்களை சேர்பது மற்றும் அவர்களுக்கு தேர்தலில் வாக்கு அளிக்க வாய்ப்பளிப்பது
2) 29.04.2012 அன்று உறுபினர்கள் பட்டியலும், நன்கொடையாளர்கள் பட்டியலும் உறுப்பினர்கள் அணைவருக்கும் வழங்குவது
3) 08.07.2012 அன்று தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்ட்து.
இதை Minutes எழுதி உறுப்பினர்களுக்கு அனுப்பவில்லை.
உறுப்பினர்களை சேர்பது குறித்த தகவல்களை டெல்லி வாழ் சௌராஷ்டிரர்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும், திரு.பாண்டுரங்கன் அவர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கும்படி திரு.கிஷோர்குமாரை அணுகியபோது, EC மீட்டிங் போட்டு தான் சேர்க்க முடியும் இப்போது சேர்க்க முடியாது என்றும் பணத்தை திருப்பி கொடுக்கும்படியும் கூறிவிட்டார். தலைமறைவு தலைவரை தொடர்பு கொண்டு விவரம் கூறிய போது  அப்படி ஒன்றும் அவசியமில்லை தான் பேசுவதாகவும் கூறினார். ஆனால் அதன் பின்பு ஒன்றும் நடக்கவில்லை.
இன்றுவரை(07.05.2012) உறுபினர்கள் பட்டியலும், நன்கொடையாளர்கள் பட்டியலும் வழங்கவில்லை.
08.07.2012 அன்று தேர்தல் நடைபெறுமா என தெரியவில்லை.
தற்போது கிடைத்துள்ள தகவள்களின் படி, குறிப்பிட்ட சிலருக்கு நன்கொடை பணத்தை திருப்பி தருகிறார்கள்.
இந்த முடிவை யார் எடுத்தது  என தெரியவில்லை.நானும் நன்கொடை கொடுத்துள்ளேன். எனக்கு திருப்பி தரவில்லை.கடிதம் எழுதினேன்.பதில் வரவில்லை.
இவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் அதிகாரத்தை யார் தந்தது? சட்டபடி அது செல்லுமா? வரிவிலக்கு பெற்ற நண்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு பெற்றதை திருப்பி தருவார்களா?
இவர்கள் தேர்தலில் உறுதியாகி விட்ட நிலையில், அசோசியேசன் சேர்த்த நிதியை அடுத்த நிர்வாக குழுவிடம் ஒப்படைக்க மனம் இல்லை. அடுத்து வரும் நிர்வாக குழுவிடம் நம்பிக்கையில்லை. இவர்கள் முன்பு கூறியதுபோல் அடுத்து வரும் நிர்வாகம் முறைகேடு செய்யும் என்ற கற்பணையில்  பணத்தை வேண்டபட்டவர்களுக்கு திருப்பி தருகிறார்கள். சரியான நபர்களுக்கு தான் திருப்பி தருகிறார்களா எனவும் தெரியவில்லை.நன்கொடை யார் கொடுத்த்து என்று யாருக்கும் தெரியாத நிலையில் யாருக்கு திருப்பி தருகிறார்கள் எனவும் தெரியவில்லை.

இவர்களின் இந்த சொல் செயல் மூலம், டெல்லி வாழ் சௌராஷ்ரா சமூகத்தை இழிவு படுத்தியுள்ளனர். டெல்லி வாழ் சௌராஷ்ரா சமூக மக்களின் நேர்மையை மானபங்கபடுத்தியுள்ளனர்.
இப்போது நாங்கள் எதிர்பார்பது என்னவென்றால்,
1.உடனடியாக உறுப்பினர்கள் பட்டியல் வெளியிட வேண்டும்.
2.நன்கொடை யார் எப்போது எவ்வளவு கொடுத்தார்கள் மற்றும் யாருக்கு எவ்வளவு திருப்பி கொடுத்தார்கள் என்ற விவரங்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
3.2005 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான தணிக்கை செய்யப்பட்ட BALANCE SHEET ஆண்டு வாரியாக சமர்பிக்க வேண்டும்.
4. மேலும் 01.04.2012 முதல் 30.06.2012 காலத்திற்கான வரவு செலவு கண்க்குகளையும் சமர்பிக்க வேண்டும்.
மேற்கூறிய தகவல்களை 25.05.2012க்குள் சமர்பிக்காவிட்டால்;
தலைவர், செயலாலர் மற்றும் பொருளாளர் மீது முறைகேடாக பணம் வசூலித்தது , கணக்கு காட்டாதது, முறைகேடாக பயன் படுத்தியது, சட்டத்திற்க்கு புறம்பாக வேண்டபட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்ததாக கூறி பணத்தை சுருட்டியதற்காக இவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். LEGAL NOTICE ALREADY SERVED THEM.

2004 ஆண்டு தேர்ந்தெடுக்கபட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள்
1. Mr.R.S.S. Nathan – President
2. Dr.Prem Kumar – Vice-President (Recently he resigned from the post)
3. Mr.Kishore Kumar – Secretary
4. Mr.Krishnamurthy – Joint Secretary
5. Mr.Ganesh Babu – Treasurer
6. Mr.Ganesh – EC Member (Recently he resigned from the post)
7. Mrs.Jaal Rangal – EC Member (Recently she resigned from the post)
8. Mrs.Govardhan – EC Member (Recently she resigned from the post)
9. Mr.Parthiban – Nobody knows who is he – he never attended any meeting
10. Mr.Murali – Nobody knows who is he – he never attended any meeting
11. Mr.Ganesh – EC Member

இந்த தகவல்கள் இங்கும், WWW.SOURASHTRA.IN WEB SITEலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான் அறிந்த சௌராஷ்ட்ரா மக்களுக்கு EMAIL செய்யப்பட்ட்து.




M.S.SEKAR
Q 50 SECTOR 12
NOIDA 201 301
PHONE: 09899236141
7TH MAY 2012

No comments:

Post a Comment