Wednesday, 2 October 2013

நவம்பர் 2013 பொதுகுழு கூட்டம் நடக்குமா ?

டெல்லி சௌராஸ்டிரா அசோசியேசன் பொதுகுழு கூட்டம் நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வந்தது. இப்போது நிதி நிலமை சரியில்லை என்றும், கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

31.03.2012 நிதி நிலை அறிக்கைபடி , வங்கியில் ரூ.1,93,105/- இருந்தது. அதற்கு பிறகு செப்டம்பர் மாதம் ஒரு பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. வேறு எந்த நிகழ்சியும் நடைபெறவில்லை. அந்த கூட்டத்திற்க்கு சிறிதளவு பணம் செலவு செய்திருந்தாலும், ரூ. 1,50,000/- அளவுக்கு தற்போது பணம் இருக்கவேண்டும். இந்த நிலையில் பணம் இல்லை என்றும் பொதுகுழு கூட்ட பணம் திரட்ட முயற்சி செய்யப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரூ. 1,50,000/- என்ன ஆனது.

மேலும், சென்ற வருடம், கட்டிட கட்டுவதற்க்கு சேர்க்கப்பட்ட ரூ.22,00,000/- திருப்பி கொடுக்கப்பட்டது. இந்த பணம் வங்கியில் இருந்த போது கிடைத்த வட்டி பணம் என்ன ஆனது. அந்த கால கட்டங்களில், கூட்டங்கள், நிகழ்சிகள் ஏதும் நடைபெறவில்லை. நன்கொடை வாங்கப்பட்ட பணம் முழுவதுமாக திருப்பி தரபடவில்லை

நான் ரூ. 6,000/- நன்கொடை கொடுத்தேன். எனக்கு ரூ.5,000/- தான் திருப்பி தரபட்டது. மீதி ரூ.1000/- மற்றும் வட்டி பணம் திருப்பி தரவில்லை. யாருக்கும் வட்டி பணம் திருப்பி தரவில்லை. அந்த பணம் எல்லாம் என்ன ஆனது.

நன்கொடை பணம் திருப்பி தரும் போது, K.L.N. கல்வி நிறுவனத்திற்க்கு, ரூ.2 லட்சம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் என்று கேள்வி கேட்ட போது, நாம் ஒவ்வொரு வருடமும் யாருக்காவது நன்கொடை கொடுக்கவேண்டும் என்றும் அதன் அடிப்படையில், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் காரணம் கூறப்பட்டது.
நம்மை விட பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கு தானே நன்கொடை கொடுக்கவேண்டும் என்றும் நம்மை விட வசதி படைத்த KLN  கல்வி நிறுவனத்திற்க்கு ஏன் கொடுக்கப்பட்டது என்று கேட்டதற்கு, சரியான காரணம் கூறவில்லை. இப்போது இவர்களுக்கு நாம் கொடுத்தால், நமக்கு தேவையான போது அவர்கள் கொடுப்பார்கள் என கூறினார்கள்.. அதற்கு தாங்கள் பொறுப்பு என்று தலைவர். திரு.RSS நாதன் அவர்களும் செயலாளர் திரு.கிஷோர் அவர்களும் கூறினார்கள்.

எனவே இப்போது, KLN  நிறுவனத்திடமிருந்த அந்த பணத்தை திருப்பி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
திருப்பி வாங்குவார்களா. அல்லது காந்தி கணக்கில் எழுதப்பட்டுவிட்டதா? அல்லது கல்வி நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் கொடுக்கவேண்டிய பணத்திற்க்கு ஈடு செய்து விட்டார்களா ?

பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாம் காந்தி விட்ட வழி..


No comments:

Post a Comment