Friday, 27 September 2013

தேர்தலும் விதிமுறைகளும்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அசோசியேசன் பொதுகுழு கூட்டமும் தேர்தலும் நடந்தது. இந்த கூட்டம் 6 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. 

கூட்டத்தில் கடந்த ஆண்டுகளின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள்(income and expenditure a/c and balance sheet upto 31.03.2012) 31.03.2012 முடிய தாக்கல் செய்யப்பட்டது. இவை குறித்து விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை.
இந்த கால கட்டங்களில் தான் ரூ.22 லட்சம் வசூலிக்கப்பட்டு, அதை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. KLN கல்வி நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை விட ரூ.2 லட்சம் அதிகமாக கொடுக்கப்பட்டிருந்தது. இது குறித்தும் விவாதம் நடைபெறவில்லை.காரணம் பரஸ்பர குற்றசாட்டுகளும், நேரமின்மையும் காரணம். வந்திருந்த மக்கள் உணவுக்கு பிறகு கலைந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். அங்கு வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தணிக்கையாளரின்(Auditor) கையொப்பம் மட்டும் இருந்தது. அசோசியேசன் தலைவர், செயலாலர் மற்றும் பொருளாளர் கையொப்பம் இல்லை. இதுகுறித்து கேட்டபோது, அவர்களது கையொப்பம் தேவையில்லை என கூறிவிட்டனர். 
நான் இதுவரை இப்படிபட்ட நிதிநிலை அறிக்கையை பார்த்ததில்லை. அதிலிருந்த தணிக்கையாளரின் கையொப்பமும் அவருடையதுதான என தெரியவில்லை. அவரது கையொப்பத்திற்க்கு கீழே அவரது பதிவு எண் குறிப்பிடபடவில்லை. நிதிநிலை அறிக்கையின் பிரதியை வழங்கும் படி கேட்டதற்க்கும், பிறகு தருவதாக கூறிவிட்டு , 5 நிமிடத்தில் நிதிநிலை ஏற்க்கப்பட்டதாக அறிவித்துவிட்டனர்.சங்கத்தின் வருமான வரி PAN யாருக்கும் தெரிவிக்க மறுக்கிறார்கள்.

பின்பு தேர்தல் நடந்தது. அசோசியேசன் விதிமுறைபடி, ஆயுட்கால (life members) உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
நிர்வாக குழுவிடம் ஆயுட்கால உறுப்பினர்கள் யார் என்ற பட்டியல் இல்லை.
பின்பு ஏகமனதாக அங்கிருந்தவர்கள் அனைவரும்(குடும்பத்திற்க்கு ஒரு ஓட்டு என்ற முறையில்) ஓட்டளிக்களாம் என முடிவு செய்யப்பட்டு, தேர்தல் நடந்தது.

நானும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். மொத்தம் 51 வாக்குகள் பதிவானது. செயலாலர் ஒரு ஓட்டும் அவரது மனைவி ஒரு ஓட்டும் பதிவு செய்தனர். ஒரே குடும்பத்தில் இருவர் எப்படி ஓட்டளிக்கலாம் என கேட்டதற்க்கு அவர்கள் இருவரும் தனித்தனியாக ஆயுட்கால சந்தா கட்டியிருப்பதாகவும் அதனால் அவர்கள் இருவரும் ஓட்டளிக்கலாம் என கூறிவிட்டனர். இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.

மொத்தம் 51 ஓட்டுகளில் எனக்கு 18 ஒட்டு கிடைத்தது. மீதி 33 ஓட்டுகள் திரு.ராதகிருஷ்னன் அவர்களுக்கு கிடைத்தது. அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

செயலாலர் தேர்தல் முடிவில் போட்டியிட்ட இருவரும் தலா 25 ஓட்டுகள் பெற்றிருப்பதாகவும் எனவே இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரே தாளில் தான் தலைவர் மற்றும் செயலாலருக்கான ஓட்டு பதிவு நடைபெற்றது. அப்படியிருக்கையில், தலைவர் பதவிக்கான ஓட்டு பதிவில் 51 ஓட்டுகள் பதிவானதாக கூறியவர்கள், செயலாலர் பதிவிக்கான ஓட்டு பதிவில் 50 ஓட்டுகள் பதிவானதாக கூறியது பற்றி கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்படீயே 50 ஓட்டுகள் பதிவானதாகவே இருந்தாலும் , செயலாலரின் மனைவியின் ஒட்டு மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயித்தது. அவருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டிருந்தால் அவரது ஓட்டு அவரது கணவருக்கு போயிருக்காது. அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக செயலாலர் பதவிக்கு போட்டியிட்ட திரு.கனேஷ் அவர்களுக்கு 25 ஓட்டுக்களும், முன்பு பதவியிலிருந்த திரு.கிஷோர் அவர்களுக்கு 24 ஓட்டுக்களும் கிடைத்திருக்கும். இதன்படி திரு. கனேஷ் செயலாலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.

புதிய பொருளாளராக திரு.சிவநாத் அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டார்.

மேலும் அங்கு கூடியிருந்தவர்களில் சுமார் 40 குடும்பங்கள் எவ்வித உறுப்பினர்களும் அல்ல. இவர்கள் கடந்த 8-10 ஆண்டுகளில் டெல்லியில் குடியேறியவர்கள். இவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்க்கு முயற்சி செய்யவில்லை. கூட்டங்கள் நடைபெறவில்லையென்பதும், அப்படீயே நடைபெற்றாலும், வேறு பலவிசயங்களில் விவாதம் திசை திரும்பியதால், உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி கவலை கொள்ளவில்லை. நடந்து முடிந்த தேர்தல் சட்டபூர்வமாக செல்லகூடியது அல்ல என்றாலும், அங்கு கூடியிருந்தவர்களின் அனைவரது ஒப்புதலுடன் நடந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 செயலாலர்கள் என முடிவு செய்யப்பட்டாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருகனேஷ் அவர்கள் தான் பதவி ஏற்க விரும்பவில்லையென்றும், பழைய செயலாலர் திரு.கிஷோர் அவர்களே தொடர்ந்து பதிவி வகிக்கட்டும் என்று விட்டுகொடுத்துவிட்டார். ஆனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் திரு.ராதகிருஷ்னன் அவர்கள் இருவருமே செயலாலர் என கூறி முடித்துவிட்டார்.. இன்று வரை திரு.கனேஷ் தான் செயலாலர் என ஒப்புகொள்ள மறுக்கிறார். இந்த இழுபறி இன்றும் நீடிக்கிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே நடந்த பொதுகுழு கூட்டதிற்க்கான முடிவுகளை இதுவரை செயல்படுத்தவில்லை.

1) தேர்தல் முடிவுகளை பதிவாளருக்கு(Registrar of Socities) இன்னமும் தெரியபடுத்தவில்லை.
2) தேர்தல் முடிவுகளை வங்கிக்கு இன்னமும் தெரியபடுத்தவில்லை. யாருடைய கையெழுத்து மூலம் வங்கி கணக்கு இயக்கப்படும் என்று வங்கிக்கு தெரியபடுத்தவில்லை.
3)புதிய பொருளாளரிடம் இன்னமும் கணக்குவழக்குகள் ஒப்படைக்கபடவில்லை.
4)தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை, வருமான வரி துறையிடம் இன்னமும் சமர்பிக்கவில்லை.

தற்போது, வருகின்ற நவம்பர் 2013 அன்று பொதுகுழு கூட்டம் கூட்ட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

1)இந்த கூட்டத்திற்க்கு முன்பாக மேலே கூறப்பட்டுள்ள 4 விசயங்களையும் செய்து முடிக்க வேண்டும்.
2)கூட்டத்திற்க்கு முன்பாகவோ அல்லது கூட்டத்திலோ, அங்கு வருபவர்கள் அனைவரையும் ஆயுட்கால உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும்.
3) அப்படி சேர்க்கப்பட்ட பின்பு, பழைய புதிய ஆயுட்கால உறுப்பினர்களின் பட்டியலை அனைவருக்கும் எழுத்து மூலம் வழங்க வேண்டும்.
4) அந்த உறுப்பினர்களின் பட்டியல் படி, அடுத்த தேர்தல்(Septemeber 2014) நடத்தவேண்டும்.
5) சங்க விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. நிர்வாக குழு மாற்றியமைக்கபடவுள்ள விதிமுறைகளை விவாதத்திற்க்கு முன்கூட்டியே அனுப்பிவைக்க வேண்டும்.
(சங்க விதிமுறைகளும், மாற்றியமைக்க வேண்டிய விதிகள் குறித்தும் தனிபதிவு விரைவில் வெளியிடுகிறேன்).


No comments:

Post a Comment