இசை சித்தர் - T.M.சவுந்திரராஜன்
நமது சௌராஸ்ட்ரா சமூகத்திற்கு பெருமை சேர்த்தவர்களில் திரைப்பட பின்னனி பாடகர் திரு.T.M. சவுந்திரராஜன் அவர்கள் முக்கியமானவர்.
நமது சமுகத்திற்காக நடத்தப்படும் ஜுட்டிசன்ஸ் பத்திரிக்கையில் அவரை பற்றி குறிப்பிடும் போது "இசை சித்தர் " T.M.சவுந்திரராஜன் என குறிப்பிடபடுகிறார்.
இந்த "இசை சித்தர்" என்ற பட்டம் யாரல், எந்த அமைப்பால் எப்போது கொடுக்கப்பட்டது. வேறு எந்த பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் இவ்வாறு குறிப்ப்பிடபடுவதில்லை.
இதை கேட்க காரணம் இருக்கிறது. நமது தேச தந்தை என்று அழைக்கப்படும் திரு.காந்தி அவர்களை குறிப்பிடும் போது, "மகாத்மா" காந்தி என்று குறிப்பிடபடுகிறது. இது குறித்து தகவல் அற்யும் சட்டத்தின் கீழ் அரசிடம் "மகாத்மா" என்ற அடைமொழி எங்கு யாரால் கொடுக்கப்பட்டது என் கேட்டதற்க்கு, அரசிடம் அது குறித்த் தகவல் இல்லை என்று பதில் அளித்துள்ளது.
எனவே, நமது சமூகத்தை சார்ந்த ஒருவருக்கு அவருடைய பெயருக்கு முன்னால் கொடுக்கப்படும் அடைமொழியின்(இசை சித்தர்) வரலாற்றை அறிந்து பதிவு செய்து வைப்பது சிறந்தது என கருதுகிறேன்.
இது குறித்து ஜுட்டி சன்ஸ் பத்திரிக்கைக்கும் எழுதியுள்ளேன். பதில் கிடைததால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கு யாருக்காவது தெரிந்திருந்தால் தெரியப்படுத்தவும்.
அவருக்கு இந்த அடைமொழியை உபயோகபடுத்துவது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை.
No comments:
Post a Comment